ETV Bharat / state

ஆற்காடு வீராசாமி குறித்து சர்ச்சை பேச்சு - வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

author img

By

Published : Jun 11, 2022, 12:35 PM IST

Updated : Jun 11, 2022, 1:17 PM IST

அண்ணாமலை சர்ச்சை
annamalai issue

நாமக்கல் பொதுக்கூட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உடல்நலம் குறித்து நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் ஆற்காடு வீராசாமியின் மகனான கலாநிதி வீராசாமி, " என் தந்தை கொள்ளு பேரனின் பிறந்த நாள் விழாவில் கடந்த 10ஆம் தேதி கலந்து கொண்டார். நல்ல உடல்நலத்துடன் உள்ள அவரை , இறந்துவிட்டதாக கூறியதை வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே அண்ணன் ஆற்காட்டார் நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கு இறைவனை வேண்டுவதாகவும், நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக பேசியதற்கு வருந்துவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாரிசு அரசியல் விவகாரம் - பதவி விலக தயார் - ப.சிதம்பரம்

Last Updated :Jun 11, 2022, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.