மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு மாணவர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரு மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவம் அளிக்கப்பட்டுவருகின்றது. மேலும் இரு மாணவர்களுடன் தொடர்பில் இருந்த இதர மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு