ETV Bharat / city

கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

author img

By

Published : Mar 27, 2022, 6:22 PM IST

கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உள்பட்ட ECR சாலையில் உள்ள கானத்தூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தாம்பரம் அருகே கானத்தூர் காவல் நிலையத்தில் நேற்று (மார்ச் 26) திடீர் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி, “மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குறைகளை உடனுக்குடன் களைய காவல் நிலைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். மேலும், சிறப்பாக செயல்பட்டு குற்ற நடவடிக்கைகள் நடவாமல் தடுத்த காவலர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.

கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். பின்பு காவலர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதையும் படிங்க: தற்காலிக இச்சைக்காக முதலமைச்சர் மீது அவதூறு பரப்பும் அண்ணாமலை - திருமா காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.