ETV Bharat / city

பொங்கல் பரிசு ரூ.2,500! - அரசாணை வெளியீடு!

author img

By

Published : Dec 21, 2020, 12:01 PM IST

assembly
assembly

சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவதற்காக ரூ.5604.84 கோடி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் குடும்பங்களுக்கும், சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பித்துள்ளோருக்கும், பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவதற்காக ரூ.5,604.84 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.

அதில், “ தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு பொங்கல் பரிசு அறிவித்து வழங்கி வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.2,500 வழங்கப்படும். இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும்.

பொங்கல் பரிசு ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், துணிப்பை ஆகியவை கொடுக்கப்படும். இதற்காக ரூ.5,604.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் ஆண்டான வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'மிஷன் 200' என்பதே நமது இலக்கு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.