ETV Bharat / city

மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது

author img

By

Published : May 2, 2022, 12:05 PM IST

மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது
மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது

சென்னையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை: தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கோட்டையூர் பள்ளிக்கூட தெருவில் உள்ள வீட்டில், கடந்த மாதம் 26ஆம் தேதி அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக தாழம்பூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் உயிரிழந்தவர் மேலைகோட்டையூரை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி என்பது தெரியவந்தது. அவரது கணவர் வீட்டில் இல்லாததால் காவல் துறையினர் சந்தேகமடைந்தனர். இந்நிலையில் உடற்கூறாய்வின் அறிக்கையில் பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, தாழம்பூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. உயிரிழந்த ராஜேஸ்வரியின் கணவர் கணேசனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பதுங்கியிருந்த கணேசனை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர், தனக்கும் தன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து காவல் துறையினர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கொலை செய்துவிட்டு தலைமறைவு: ஒரு ஆண்டிற்கு பின் வடமாநில இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.