ETV Bharat / briefs

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 9 சவரன் நகை பறிப்பு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

author img

By

Published : Aug 1, 2020, 7:28 PM IST

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 9 சவரன் நகை பறிப்பு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!
Sathankulam chain snatching

தூத்துக்குடி : சாத்தான்குளம் அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 9 சவரன் நகை பறித்துச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகேயுள்ள வடக்கு நாராயணன் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பெனிட்டா (26). இவர், அவருடைய தங்கை ஜெனிட்டா (23) என்பவருடன் ஸ்கூட்டியில் சாத்தன்குளம் மார்க்கெட்டிற்குச் சென்றுவிட்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சுப்பிரமணியபுரம் அருகே 2 இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் அவர்களை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பெனிட்டா கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் பெனிட்டா அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அரிகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். நகை பறிப்பில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.