ETV Bharat / bharat

சாப்பாட்டில் உப்பு அதிகம் - மனைவியை கொன்ற கணவர்...!

author img

By

Published : Apr 16, 2022, 2:30 PM IST

Updated : Apr 16, 2022, 2:45 PM IST

Maharashtra
Maharashtra

காலை உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ரா மாநிலம் தானேவில், பயந்தர் (Bhayandar)என்ற பகுதியில், நிலேஷ் காக்(46) என்ற நபர், காலை உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கணவர் அருகிலிருந்து துணியை எடுத்து மனைவியின் கழுத்தில் போட்டு நெரித்துள்ளார். இதனால் மனைவி துடிதுடித்து அங்கேயே உயிரிழந்துள்ளார். இதைக் கண்ட நிலேஷ் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இறந்த பெண்மணியின் சடலத்தை மீட்டு பிரதேசப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தப்பியோடிய கணவர் நிலேஷை கைது செய்து சிறையிலடைத்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதேபோல் ஒரு சம்பவம் தானேவில் நடந்தது. தேனீர் மட்டும் கொண்டு வந்த மருமகளை, காலை உணவு தரவில்லை எனக்கூறி, மாமனார் துப்பாக்கியால் சுட்டார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பங்களில் ஏற்படும் சிறிய சிக்கல்களுக்காக கொலை செய்யும் இதுபோன்ற சம்பவங்கள், அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இதையும் படிங்க: சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

Last Updated :Apr 16, 2022, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.