ETV Bharat / bharat

கடந்த 24 மணி நேரத்தில் 4,157 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : May 26, 2021, 11:34 AM IST

india
உயிரிழப்பு

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே 71 லட்சத்து 57 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், இரண்டு லட்சத்து 8 ஆயிரத்து 921 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 71 லட்சத்து 57 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில், அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் நேற்று (மே.25) ஒரே நாளில் 34,285 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக, கேரளாவில் 29,803 பேருக்கு தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்தியாவில், நேற்று (மே.25) 4,157 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 11 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரத்து 816 ஆக உள்ளது. தற்போது 24 லட்சத்து 95 ஆயிரத்து 591 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 20 கோடியே 6 லட்சத்து 62 ஆயிரத்து 456 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.