ETV Bharat / bharat

காதல் ஜோடிகளிடம் அத்துமீறிய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!

author img

By

Published : Mar 15, 2020, 5:46 AM IST

police officers suspend
police officers suspend

புதுச்சேரி: விடுதியில் தங்கியிருந்த காதல் ஜோடிகளிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை புதுச்சேரி அம்பலத்தடையார் மடம் வீதியில் உள்ள தங்கும் விடுதியில் கடலூரைச் சேர்ந்த இரு காதல் ஜோடிகள் தங்கியுள்ளனர். கடந்த புதன்கிழமை விடுதிக்குச் சென்ற பெரியக்கடை காவலர் சத்தீஷ்குமார், ரிசர்வ் பட்டாலின் காவலர் சுரேஷ் ஆகியோர் அந்த காதல் ஜோடிகளிடம் அத்துமீறியுள்ளனர். இதுமட்டுமின்றி அவர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டு காதல் ஜோடிகளிடம் அத்துமீறிய இரண்டு காவலர்கள்

இது தொடர்பாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறை இயக்குநர் (DGP) பாலாஜி ஸ்ரீவத்வா, அத்துமீறிய இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார். அவர்களின் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிறந்த குழந்தையையும் விட்டுவைக்காத கொடூர கொரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.