ETV Bharat / bharat

நிபாவை தொடர்ந்து ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்.. கேரளாவை மிரட்டும் வைரஸ் தாக்குதல்.. அதிகாரிகளின் எச்சரிக்கை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 10:01 PM IST

நிப்பாவை தொடர்ந்து அறிமுகமான ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்
நிப்பாவை தொடர்ந்து அறிமுகமான ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்

African swine fever reported in Kozhikode: நிபா வைரஸை தொடர்ந்து தற்போது கேரளாவில், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோழிக்கோடு: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கரோனா வைரஸின் அச்சுறுத்தலில் உலகமே ஸ்தம்பித்திருந்த நிலையில், உலகளவில் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் உதவியோடு, உலகமே கரோனா பிடியில் இருந்து மீண்டு வந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் கேரளா மாநிலத்தில், நிபா வைரஸ் மற்றும் அவ்வப்போது பன்றிக்காய்ச்சல் தொற்று சற்று அதிகரித்தே காணப்பட்டது. இதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநில அரசால் சில நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டன.

கேரளாவில் தீவிரமடைந்த இந்த பாதிப்பு, பொதுமக்களிடத்தில், ஆயிரக்கணக்கில் உயிர்பலி வாங்கியது. தற்போது வரை, இந்த பாதிப்புகள் விலங்குகளில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், லட்சக் கணக்கிலான கோழிகள், பன்றிகள் பொதுமக்கள் வசிப்பிடத்தில் இருந்து தூரமாக கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டன. இருப்பினும் கேரளா மாநிலம், கோழிக்கோடு சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் நிபா மற்றும் பன்றிக்காய்ச்சலால் அதிகளவில் பாதிப்புக்குள்ளானது.

காய்ச்சலின் வீரியம் அதிகரித்த நிலையில், பள்ளி, கல்லூரி, புன்னிய தலங்கள், சந்தைகள் என மக்கள் அதிகளவில் புலங்கும் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. மாநில அரசின் துரித செயலால் நோய்களின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நீடித்து இருந்த இந்த சூழலில், தற்போது மீண்டும் நோய் பாதிப்பு அபாயம் உண்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரா என்ற பகுதியில், காட்டுப்பன்றி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக பெற்ற தகவலின் அடிப்படையில், சென்ற வனத்துறையினர் இறந்துகிடந்த காட்டுப்பன்றியை கைப்பற்றி ஆராய்ச்சிக்காக போபாலில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆராய்ச்சிக்குப் தகவல்கள் மீண்டும் கேரளா அரசுக்கு ஆட்டத்தை கொடுத்துள்ளது. இறந்து கிடந்த பன்றியை ஆய்வு செய்ததில், நிபா வைரஸ் மற்றும் ஆப்பிரக்கன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. கேரளா மாநிலத்தில், ஆப்பிரக்கன் பன்றிக்காய்ச்சலால் ஏற்பட்டுள்ள முதல் பாதிப்பு இதுவாக பதியப்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்று மனிதர்களிடையே நேரடியாக பரவுக்கூடிய வைரஸ் இல்லை என்றும் தெளிவு படுத்துகிறது ஆராய்ச்சியின் முடிவுகள்.

இதனால் கேரளா மாநிலத்தில், மக்கள் வசிப்பிடத்தில் இருந்து பன்றிகள் அனைத்தும் அகற்றபட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தற்போது வசிப்பிடத்திற்கு அருகில் எந்த பன்றி பன்னைகளை அகற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து, கேரளா மாநிலத்தில் பன்றி பன்னை மற்றும் பன்றி வளர்ப்பவர்களுக்கு மாநிலம் சார்பாக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இவர்களுக்கு, அக்டோபர் 6ஆம் தேதி, மாவட்ட கால்நடை மருத்துவமனை மண்டபத்தில் இது குறித்து விளக்கங்கள் விரிவாக கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரக்காவிலுள்ள கென்யாவில் 1907ஆம் ஆண்டு, ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் முதன்முறையாக கண்டறியப்பட்டது. அஸ்பார்விரிடே என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல், காட்டுப்பன்றிகள் மூலம் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால் பல உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் போது, காட்டுபன்றிகளால் இந்த நோய் பரவியதாக கூறப்படுகிறது. பின்னர், மாமிசத்திற்காக ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பிய கண்டத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட பன்றிகளால், ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, 1957 காலகட்டங்களில், ஐரோப்பிய கண்டத்தில் தலைதூக்கியது ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல். முதன்முதலில் போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் இந்த நோய் கண்டறியப்பட்டது.

பின்னர், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, மால்டா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் படையெடுக்கத் தொடங்கியது. இதில் மால்டா நாட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பின் போது நாட்டில் இருந்த அனைத்து பன்றிகளும், பொது மக்களின் பாதுகாப்புக் கருதி கொலை செய்யப்பட்டது. குறிப்பாக 1960 மற்றும் 90 களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பன்றி மாமிசங்களின் விற்பனையில் மலிவை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து 2018 ஆகஸ்ட் மாதம் முதன்முதலாக ஆசிய நாடுகளில் இந்த நோய், சீனாவிலுள்ள கிழக்கு மாகனாத்தில் கண்டறியப்பட்டது. பின் நாட்களில் தவிர்க்க முடியாத நாடுகளின் புழக்கத்தினால், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், வியட்னாம், தாய்லாந்து, கிழக்கு தைமர், தென் கொரியா,கம்போடியா, மங்கோலியா,மியான்மர் மற்றும் லயோஸ் போன்ற தென்கிழக்கு பகுதிகளில் கணிசமாக பரவத் தொடங்கியது.

தற்போது உலகம் முழுவதும் இதன் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி இந்தியாவில் மகாராஸ்டிரா மற்றும் அஸ்ஸாமிலும் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதி அன்று கேரளா மாநிலத்தில் கண்டறியப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது வயநாட்டில் மீண்டும் துவக்கம் கண்டுள்ளது. இந்த சமயம் ஆப்பிரக்கன் பன்றிக்காய்ச்சல் தீவிரம் அடையும் முன்பு தக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகிறது கேரளா மாநில அரசு.

இதையும் படிங்க: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்..! அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.