தென்னக காசி ஈரோடு பைரவர் ஆலய தேய்பிறை அஷ்டமி பூஜை..திரளான பக்தர்கள் பங்கேற்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 8:31 AM IST

thumbnail

ஈரோடு: தென்னக காசி எனப்படும் அவல்பூந்துறை பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நேற்று (பிப்.3) நடைபெற்றது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

ஈரோடு, அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றி பாளையம் என்ற பகுதியில், கால பைரவர் கோயில் உள்ளது. தென்னக காசி என்று அழைக்கப்படும் இந்த பைரவர் கோயிலில், 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட பைரவர் உருவ சிலை அமைந்துள்ளது. 'உலகிலேயே மிக உயரமான பைரவர் சிலை' இடம்பெற்றிருக்கும் இக்கோயிலின் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்கள் பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு.

இந்நிலையில், தேய்பிறை அஷ்டமி, கால பைரவருக்கு உகந்த தினம் என்பதால், நேற்று நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி பூஜையில், பைரவ பீடத்தின் ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில், பைரவருக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு, பைரவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.