கார் மீது இரு சக்கர வாகனம் மோதி கோர விபத்து - நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 9:13 PM IST

thumbnail

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே நாகம்பட்டியில் இருந்து மதன்குமார் என்பவரும் மற்றும் வினோத் பாண்டி என்பவரும் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூருக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி வந்த கார் ஒன்று சாலையைக் கடந்துள்ளது இதைச் சற்றும் எதிர்பாராத இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் காரின் பக்கவாட்டின் மீது மோதியுள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மதன்குமார் மற்றும் வினோத் பாண்டி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது தனியார் மருத்துவமனையில் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.