பட்டப்பகலில் இரு சக்கர வாகனம் திருட்டு.. சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி வீடியோ..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 9:52 PM IST

thumbnail

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பக்ரித்தக்கா பகுதியைச் சேர்ந்தவர் நிசார் அஹமத் (42). இவர் கத்திகளுக்குச் சாணை பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். 

இந்த நிலையில், இன்று (பிப்.18) வழக்கம் போல் வேலைக்குச் சென்ற நிசார் அஹமத் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது ஸ்ப்ளெண்டர் (Splender) இரு சக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. இதனை அறிந்த மர்ம நபர்கள் இருவர் இரு சக்கர வாகனத்தைத் திருடிச் சென்று உள்ளனர். 

இதனையடுத்து நிசார் அஹமத் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தனது இரு சக்கர வாகனத்தை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

பட்டப்பகலில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நிசார் அஹமத் புகார் குறித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.