சென்னையில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் பாய்ந்தோடுகிறது. வீடுகளைச் சுற்றி மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழையால் தனது வீடு முன்பு தேங்கியுள்ள மழைநீரில் மன்சூர் அலிகான் படகு ஓட்டிச் செல்லும் காணொலி வெளியாகி வைரலாகிறது.