தமிழ்நாடு

tamil nadu

தொடர் மழையால் சம்பா பயிர்கள் சேதம் - நிவாரணம் கோரும் விவசாயிகள்

By

Published : Nov 10, 2021, 6:38 PM IST

நன்னிலம் அருகே தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையால் சேதமடைந்த பயிர்கள்
மழையால் சேதமடைந்த பயிர்கள்

திருவாரூர்:தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் நன்னிலம் குருங்குளம், கந்தன்குடி, சிறுபிலியூர், நாடாகுடி, திருக்கொட்டாரம், கமுகக்டி, முகந்தனூர் மாத்தூர், வேலங்குடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் நடவு செய்திருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

நிவாரணம் வழங்க கோரிக்கை

வயல்களில் தண்ணீர் தேங்கி, வடியாததற்கு காரணம் வாய்க்கால்கள், ஆறுகள் சரிவர தூர்வாரப்படாமல் இருப்பது தான் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியரும், வேளாண் துறை அலுவலர்களும் வந்து பார்வையிடவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

மழையால் சேதமடைந்த பயிர்கள்

எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உடனடியாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நவ.13-ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு?

ABOUT THE AUTHOR

...view details