தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா பாதிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 10:20 PM IST

Tamilnadu Covid 19 cases: தமிழ்நாட்டில் 117 பேர் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (டிச.22) ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

tamilnadu-covid-affected-and-treated-patient-details
தமிழ்நாட்டில் 117 பேருக்கு கரோனா சிகிச்சை இன்று (டிச.22) ஒரே நாளில் 22 பேருக்கு பாதிப்பு..!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, தற்போது 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (டிச.22) புதிதாக 22 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்திலிருந்த பாதிப்பு, தற்பொழுது கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின்போது, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

அவ்வாறு இருந்தால், அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று வரக்கூடாது என்பதற்காக, தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்த விவரங்களில், தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகள் 406 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இதுவரையில் 7 கோடியே 9 லட்சத்து 99 ஆயிரத்து 462 பேர் பாதிக்கப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. திருவள்ளூரில் 2 பேர் என மொத்தம் 22 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று தமிழ்நாட்டில் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் இருப்பதால் காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்யவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பேரிடர் காலங்களில் மத்திய அரசு வழங்கிய நிதி இவ்வளவு தான்... பட்டியல் வெளியிட்ட தமிழக அரசு!

ABOUT THE AUTHOR

...view details