தமிழ்நாடு

tamil nadu

"ரூ. 35 லட்சம் முதல் ரூ. 85 லட்சம் கிடைக்கும்" - இழப்பீட்டு தொகை அறிவிப்பால் ஃபோர்டு ஊழியர்கள் அதிருப்தி

By

Published : Sep 8, 2022, 7:15 AM IST

Etv Bharat
Etv Bharat ()

ஃபோர்டு தொழிற்சாலையில் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களுக்கான இழப்பீட்டு தொகையை அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே செங்கல்பட்டு மறைமலை நகரில் ஃபோர்ட் தொழிற்சாலை 25 வருடங்களுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வந்தனர். தொடர்ந்து கார் தயாரிப்பு குறைந்ததால் தொழிற்சாலையை மூடும் முடிவுக்கு வந்த நிர்வாகம், ஜூலை மாதம் பணியை நிறுத்தியது. அதன்பின் ஆகஸ்ட் மாதம் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியும் நிறுத்தப்பட்டது.

இதனிடையே தொழிற்சாலையை மூடக்கூடாது என்றும், தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும் என்றும் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தினர். இறுதி தீர்வுத் தொகையை (பைனல் செட்டில்மெண்ட்) குறித்து தொழிலாளர் சங்கங்கள் நிர்வாகத்துடனும் அரசுடனும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தன்னிச்சையாக இறுதித் தீர்வுத்தொகையை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இழப்பீடு வழங்கப்படுமாயின் வருடத்திற்கு குறைந்தபட்சம் 185 நாட்களாவது கணக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் நிர்வாகம் 130 நாட்கள் மட்டுமே கணக்கீடு செய்து இறுதி தீர்ப்பு தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 33 லட்ச ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 85 லட்ச ரூபாய் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவினர் அனைவரும் திமுகவில் இணைய வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி

ABOUT THE AUTHOR

...view details