சென்னை விமான நிலையத்திற்கு பெரிய அளவிலான கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
அப்போது கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த அசாப் அலிகான்(51),
முகமது ரம்சின்(51), ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் (21), கலந்தர் அப்பாஸ்(36), தாஜுல்மின்(41) மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த நாகூர் கனி(23) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறையினர் விசாரித்தனர்.