தமிழ்நாடு

tamil nadu

பூட்டிய வீட்டில் 15 சவரன் நகைகள் கொள்ளை

By

Published : Dec 10, 2021, 10:26 AM IST

15 சவரன் தங்க நகை கொள்ளை
15 சவரன் தங்க நகை கொள்ளை

பழைய பெருங்களத்தூரில் பூட்டியிருந்த வீட்டில் 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:பழைய பெருங்களத்தூர் சரவணபவன் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் உமா (வயது-39) இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணாநகரில் உள்ள அவரின் அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று (டிச.9) வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்த உமா உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, படுக்கை அறைக்குச் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் கலைக்கப்பட்டு இருந்தது.


காவல்துறையினர் விசாரணை

மேலும், பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து,அங்கு சென்ற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் விசாரணை

பழுதடைந்த சிசிடிவி கேமரா

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததால் கொள்ளையர்களைக் கண்டறிவதில் காவல்துறைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.


இதையும் படிங்க: Black Box: ஹெலிகாப்டர்களில் கறுப்புப் பெட்டிக்கு முக்கியத்துவம் ஏன்?

ABOUT THE AUTHOR

...view details