தமிழ்நாடு

tamil nadu

உஜ்ஜைனி சிறுமி வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோட முயன்றபோது காயம்!

By ANI

Published : Sep 29, 2023, 1:14 PM IST

Ujjain minor girl rape case: உஜ்ஜைனி சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பரத் சோனி தப்பியோட முயற்சித்தபோது அவரும், அவரை துரத்தி பிடிக்கச் சென்ற காவல்துறையினரும் காயமடைந்ததாக எஸ்.பி. சச்சின் சர்மா தெரிவித்துள்ளார்.

Ujjain minor girl rape case
உஜ்ஜைனி சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பரத் சோனி தப்பியோட முயற்சி

உஜ்ஜைன்: உஜ்ஜைன் சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்பாகப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (செப்.28) காவல்துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் உஜ்ஜைன் காவல் துறை கண்காணிப்பாளர் சச்சின் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "உஜ்ஜைன் சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றக் காட்சியை மீண்டும் உருவாக்குவதற்காகக் குற்றம் சாட்டப்பட்ட பரத் சோனி என்பவரைச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போது பரத் சோனி தப்பி ஓட முயன்றதாகவும் அப்போது அவருக்கும், அவரை துரத்திப் பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது" என்று உஜ்ஜைன் காவல் துறை கண்காணிப்பாளர் சச்சின் சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "பாதிக்கப்பட்ட சிறுமிக்கு யாரும் உதவவில்லை என்று ஒரு வதந்தியைப் பரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினர் விசாரணையில் அந்த சிறுமிக்கு மக்கள் நிதி உதவி செய்ததைக் கண்டறிந்துள்ளோம். இருந்தாளும் இன்னும் அதிக உதவி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். காவல்துறை மீது நம்பிக்கை வைத்துள்ள இந்தூர் மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:உ.பியில் பாலியல் வன்கொடுமையால் பாதித்த பெண்ணிடம் ஆபாச கேள்வி.. காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details