ராய்பூர்: சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் நேற்று இரவு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரஷாந்த் அகர்வால் கூறுகையில், "சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் விமான பயிற்சியின் போது விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகள் ஸ்ரீவஸ்தவா மற்றும் பாண்டா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர் என தெரிவித்தார்.