தமிழ்நாடு

tamil nadu

10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 5:14 PM IST

தெலங்கானா மாநிலத்தில் தனது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்துள்ளார்.

இதனால், செய்வதறியாத அவரது மனைவி தினமும் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர்களுக்கு, நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவரையும் யாசகம் பெறும் பணத்தில் வளர்த்து வருகிறார். ஒருநாள் வழக்கம்போல் அப்பெண் யாசம் பெற வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை மகள் என்று கூட பாராமல் சிறுமியின் தந்தை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனை அந்த வழியாக சென்ற உறவினர் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டிய நிலையில் அக்கம்பக்கத்தினர் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சிறுமியை மீட்டனர். தொடர்ந்து, சிறுமியின் தாயார் இந்த விவகாரம் தொடர்பாக தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டத்தின் மீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நாம்பள்ளி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றம் உறுதியான நிலையில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. வடமாநில இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details