Helicam shoot: கடலூரில் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புகள், விவசாய நிலங்கள்!
கடலூரில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள ஆள்பேட்டை, தாழங்குடா, சின்ன கங்குப்பம், நாணமேடு, உப்பலவாடி, திடீர் குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. சுமார் 500 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டுள்ள நெல், கத்திரி, சாமந்த வெண்டை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர்.