ETV Bharat / state

வேலூர் கோட்டை அகழியில் இளைஞர் சடலமாக மீட்பு.. சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லையா? - Youth died in Vellore fort moat

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 10:04 PM IST

Vellore Fort death: வேலூர் கோட்டை அகழியில் இளைஞர் ஒருவர் குதித்து உயிரிழந்த நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் கோட்டை அகழி புகைப்படம்
வேலூர் கோட்டை அகழி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: புகழ்பெற்ற வேலூர் கோட்டை அகழி ஆகியவற்றை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். அந்த வகையில், இன்று மாலை சுமார் 4.15 மணி அளவில் கோட்டை அகழியைச் சுற்றி மக்கள் இருந்துள்ளனர். அப்போது, திடீரென்று ஒரு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் கோட்டை அகழி நீரில் குதித்து மூழ்க ஆரம்பித்துள்ளார். அதேநேரம், குதித்த சில நிமிட நேரத்தில் அவரது உடல் மேலே வந்துள்ளது.

மேலும், இரண்டு முறைக்கு மேல் தண்ணீரின் மேற்பகுதிக்கு வந்த அவரது உடலானது, கடைசியாக உள்ளே சென்றுள்ளது. இதனைச் சுற்றி இருந்தவர்கள் நீரில் விளையாடுகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். ஆனால், நீரில் மூழ்கிய அவர் மீண்டும் வராததைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, சுமார் 20 நிமிட தேடுதலுக்குப் பின் அவரது உடல் கிடைத்துள்ளது. நீல நிற பேண்ட் மற்றும் நீல நிற சட்டை அணிந்திருந்த அவர் இடது கையில் வாட்ச் அணிந்திருந்துள்ளார்.

மேலும், இடது மணிக்கட்டில் கருடன் என்ற பெயரும், வலது மணிக்கட்டில் ரிக்கி பாண்டிங் என்ற பெயரையும் பச்சை குத்தியுள்ளார். பின்னர், உடலைக் கைப்பற்றிய வடக்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு குதித்தாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது நிகழ்ந்திருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், வேலூர் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைக் கண்காணிப்பதற்காக அருகில் உள்ள வடக்கு காவல் நிலையத்தின் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. ஆனால், அந்த கேமராக்கள் பராமரிப்பு இன்றி இருப்பதாகவும், எனவே, அதனை முறைப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 17 வயது சிறுவன் பழைய குற்றாலம் வெள்ளத்தில் சிக்கியது எப்படி? மாவட்ட ஆட்சியரின் பதில் என்ன? - Boy Died In Courtallam Flood

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.