பெரம்பலூரில் 987 பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 9:32 PM IST

thumbnail

பெரம்பலூர்: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆக 28) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 987 பயனாளிகளுக்கு 20 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன், துறை சார்ந்த பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சிறப்புத் திட்டச் செயலாக்க துறைச் செயலர் தரேஷ் அகமது, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷயாம்ளாதேவி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.