கர்நாடகாவில் 161 அடி பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை திறப்பு!

By

Published : Apr 11, 2022, 4:40 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

thumbnail

துமகூரு: கர்நாடக மாநிலம் துமகூரு குனிகல் தாலுகா பிதானகெரேவில் 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று (ஏப்.10) ராமநவமியை முன்னிட்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "கர்நாடகாவிற்கு இனி நல்ல காலம் பிறக்கும். பஞ்சமுக ஆஞ்சநேயர் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனுமனின் சிறப்பு வடிவம். உலக நலனுக்காக அனுமன் இந்த அவதாரத்தை எடுத்தார். ராம நவமியை முன்னிட்டு இங்கு பல்வேறு புனித பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.