டவ்தே புயல்: நூலிழையில் உயிர் தப்பிய பெண்!
மும்பை: டவ்தே புயல் நேற்று(மே.17) அதிதீவிர புயலாக மாறியது. இந்நிலையில், மராட்டிய மாநில பகுதிகளில் அதிக கனமழை பெய்ததுடன், சூறாவளி காற்றும் வீசியது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில், பெண் ஒருவர் காற்றில் விழுந்த மரத்தில் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பிய காணொலி வெளியாகி காண்போரை பதைபதைக்க வைக்கிறது.