ETV Bharat / state

கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி உள்பட மூவர் கைது!

author img

By

Published : Nov 3, 2019, 5:24 PM IST

murder

விருதுநகர்: சாத்தூர் அருகே காணாமல் போனதாகக் கூறப்பட்டவர் அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தெரியவந்ததையடுத்து காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி மனைவி, மகன், மகள் என மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(55). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பிச்சையம்மாள்(45). இவர்களுக்கு சுரேஷ்(28), என்ற மகனும் பிரியா(23) என்ற மகளும் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் காணாமல் போனதையடுத்து, அவரது சகோதரர்கள் தொடர்ந்து, பிச்சையம்மாளிடம் விவரம் கேட்டு வந்த நிலையில் அவர், தனது கணவர் பணி நிமித்தமாக கேரளாவுக்குச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

வெளியூர் சென்ற சுப்புராஜ் மாதக்கணக்கில் வீடு திரும்பாததால் அவரது சகோதரர்கள் சந்தேகமடைந்தனர். இந்நிலையில், சுப்புராஜின் வீட்டின் அருகே குழி தோண்டி மூடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து சுப்புராஜ் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதி நேற்று சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் சுப்புராஜின் சகோதரர் கணேசன் புகார் அளித்தார்.

Wife who murdered her husband in Virudhunagar
கொலை செய்யபட்ட சுப்புராஜ்

இதனைத் தொடர்ந்து, சாத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சுபக்குமார் தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறை அருகே சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த ஒரு இடத்தை தோண்டிப்பார்க்க முடிவு செய்து சுப்புராஜின் சகோதரர் கணேசன் காவல் துறையினரின் முன்னிலையில் அங்கு தோண்டியபோது சுமார் 3 அடி ஆழத்தில் பாதி எரிந்த நிலையில் எலும்புகள் தென்பட்டன.

அதனைத் தொடர்ந்து, பிச்சையம்மாள், அவரது மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சம்பவம் நடந்த அன்று இரவு பிச்சையம்மாள் தனது மகன், மகளுடன் வீட்டில் இருந்தபோது சுப்புராஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பிச்சையம்மாளுக்கும், சுப்புராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

அதில், எதிர்பாராதவிதமாக சுப்புராஜை தள்ளிவிட்டபோது அவர் தலையில் அடிப்பட்டு இறந்துவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் அதிர்ச்சியில் செய்வதறியாது அவரது உடலை வீட்டின் அருகே இரவோடு இரவாக குழிதோண்டி புதைத்ததாக மூவரும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் அறிந்து திரண்ட கிராம மக்கள்

சுப்புராஜின் உடலை குழிக்குள் போட்டு எரித்து இருக்கலாம் என்று கருதுவதாகவும் உடற்கூறாய்விற்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திட்டம் தீட்டி கொலை செய்த கும்பல்; இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

Intro:விருதுநகர்
03-11-19

காணாமல் போனதாக கூறப்பட்டவர் அடித்து கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்தது மனைவி மகன்,மகள் என 3 பேரும் கைது

Tn_vnr_01_murder_vis_script_7204885Body:சாத்தூர் அருகே காணாமல் போனதாக கூறப்பட்டவர் அடித்து கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்தது மனைவி மகன்,மகள் என 3 பேரும் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஸ்ரீரங்காபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ்(55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிச்சையம்மாள்(45). இவர்களுக்கு சுரேஷ்(28), என்ற மகனும் பிரியா(23) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு சுப்புராஜ் மாயமானார். பல நாட்களாக காணாததால் சுப்புராஜின் சகோதரர்கள் அவரை தேடத்தொடங்கினர். தொடர்ந்து பிச்சையம்மாளிடம் விவரம் கேட்டு வந்த நிலையில் அவர், தனது கணவர் வேலை தேடி கேரளாவுக்கு சென்று விட்டதாக கூறியுள்ளார். வெளியூர் சென்ற சுப்புராஜ் மாதக்கணக்கில் வீடு திரும்பாததால் அவரது சகோதரர்களுக்கு சந்தேகம் வலுத்தது. இந்த நிலையில் சுப்புராஜின் வீட்டின் அருகே குழி தோண்டி பின்னர் மூடப்பட்டு இருப்பது தெரிந்தது. சமீபத்தில் பெய்த மழையினால் இந்த அறிகுறி தென்பட்டது. சுப்புராஜ் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதினர். இதுகுறித்து நேற்று சாத்தூர் தாலுகா போலீசில் சுப்புராஜின் சகோதரர் கணேசன் புகார் செய்தார். தனது சகோதரர் குறித்து பலமுறை பிச்சையம்மாளிடம் கேட்டும் முறையாக பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து சாத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சுபக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டிற்கு வெளியே கழிவறை அருகே சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு இடத்தை தோண்டிப்பார்க்க முடிவு செய்யப்பட்டது. காவல்துறையினரின் முன்னிலையில் சுப்புராஜின் சகோதரர் கனேசன் அங்கு தோண்டினர். சுமார் 3 அடி ஆழம் தோண்டியபோது அங்கு பாதி எரிந்த நிலையில் எலும்புகள் தென்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த இடத்தை தோண்டுவதை நிறுத்தி விட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தாசில்தார் முன்னிலையில் அந்த இடத்தை தொடர்ந்து தோண்டிப்பார்க்க முடிவு செய்யப்பட்டது. எனவே அங்கு காவலுக்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர்.
இதுதொடர்பாக பிச்சையம்மாள், அவரது மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகியோரிடம் சாத்தூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரனையின் போது சம்பவத்தன்று கணவர் வீட்டில் இருந்து பிரியா தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். இரவில் பிச்சையம்மாள் தனது மகன், மகளுடன் வீட்டில் இருந்துள்ளார். நள்ளிரவில் சுப்புராஜ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் தள்ளிவிட்ட போது சுப்புராஜ் தலையில் அடிபட்டு இறந்து விட்டார் இதனை சற்றும் எதிர்பாராத மனைவி மக்கள் அதிர்ச்சியில் செய்வதறியாது நின்றனர். பின்னர் சுதாரித்துக் கொண்டு அவரது உடலை வீட்டின் அருகே இரவோடு இரவாக குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த தகவலை 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சுப்புராஜின் உடலை குழிக்குள் போட்டு எரித்து இருக்கலாம் என்று கருதுவதாகவும் பிரேத பரிசோதனை பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் சாத்தூர் தாலுகா காவல்துறையினர் தெரிவித்தனர். உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டியபோது அந்த ஊரே அங்கு திரண்டு இருந்தது. மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.