விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்துவருகின்றன. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான காட்டழகர் கோயில் பகுதியில் பொதுமக்கள் நடமாடும் இடத்தில் யானையின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த யானை தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்றும் பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பது, விலங்குகளை வேட்டையாடுவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்க:
உயிரிழந்த 12 பெண் யானைகளின் 26 தந்தங்களுக்குத் தீ!
தந்தம் மீதுள்ள ஆசையால், யானைகள் அழிகிறது!
இறந்து பிறந்த யானைக்குட்டி: பாசப்போராட்டம் நடத்தும் யானைக்கூட்டம்