விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரம் தான் தமிழ்நாடு அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு கடிதம் மூலம் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று வெடி குண்டு மிரட்டல் வந்து கொண்டு இருந்தது.
இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகியதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு இரண்டு அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இக்கோவிலுக்கு தற்போது ஐயப்பன் கோயிலுக்கு கேரளா செல்லும் பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநில பக்கதர்கள் வந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க...திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பங்கேற்பு!