ETV Bharat / state

அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர்கள் தலை நசுங்கி உயிரிழப்பு!

author img

By

Published : Feb 3, 2021, 9:28 AM IST

அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர்கள் தலை நசுங்கி உயிரிழப்பு
அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர்கள் தலை நசுங்கி உயிரிழப்பு

விழுப்புரம்: திண்டிவனத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சியிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரி அருகே பேருந்திற்கு எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இருசக்கர வாகனத்தில் வந்த சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் (32), எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்த கரண் (20) ஆகிய இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் காவல் துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: குன்றத்தூர் அருகே செடி நடும் பணியாளர்கள் மீது லாரி மோதி மூவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.