ETV Bharat / state

'செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது'

author img

By

Published : Nov 11, 2022, 4:12 PM IST

அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்
அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்

வேலூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்ததால் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

வேலூர்: மாங்காய் மண்டி முத்துமாரியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்தவர், கூலித்தொழிலாளி கரண் (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி சிவசக்தி (23), பிரசவத்திற்காக வேலூர் பெண்ட்லெண் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் பிரசவத்தின்போது சிவசக்திக்கு பெண் குழந்தை, இறந்த நிலையில் பிறந்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், 'மருத்துவர்கள் வர தாமதம் ஆகியதால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்து பிறந்திருக்கிறது' எனக் கூறி மருத்துவமனையில் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் பெண்ணின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததின்பேரில் பெண்ணின் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். மேலும் சிவசக்திக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: படிப்புக்காக திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் படுகொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.