வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியில் வசித்துவருபவர் யுவராஜ். அதேப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அவர் கோழிப்பண்ணை நடத்தி கோழிகளை கடைகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆம்பூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோழிப்பண்ணைக்கு அருகில் சிறு காட்டாறு செல்கிறது. அக்காட்டாறில், நேற்று மதியம் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோழிப்பண்ணைக்குள் புகுந்ததால், பண்ணையின் ஒரு பகுதியிலிருந்த சுமார் 750-க்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன.