ETV Bharat / state

Trichy Airport:ஆங்கிள் கிரைண்டர் இயந்திரத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்!

author img

By

Published : Aug 7, 2023, 8:28 PM IST

திருச்சி
Trichy

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தடைந்த பயணியிடம் ஆங்கிள் கிரைண்டர் இயந்திரத்தில் (Angle Grinder Machine) மறைத்து வைத்து கடத்தி எடுத்து வரப்பட்ட 349 கிராம் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

Trichy Airport:ஆங்கிள் கிரைண்டர் இயந்திரத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்!

திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையம் தமிழகத்தில் சென்னை அடுத்த படியாக இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ரகசியத் தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் அதிரடியாக பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 06) இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதையும் படிங்க: அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்: வீட்டு வரி ரசீதை தர மறுக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகம்!

அப்போது பயணி ஒருவர் ஆங்கிள் கிரைண்டர் இயந்திரத்தில் (Angle Grinder Machine) மறைத்து வைத்து கடத்தி எடுத்து வரப்பட்ட ரூபாய். 20 லட்சத்து 94 ஆயிரம் மதிப்புள்ள 349 கிராம் தங்கம் இருந்தது தெரிய வந்தது. விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், அதனை பறிமுதல் செய்து அந்தப் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் எந்த நோக்கத்திற்காக தங்கங்களை நூதன முறையில் கடத்தி வந்தார். அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் இவர் மீது எதுவும் நிலுவையில் உள்ளதா? இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார் என அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

ஆகவே, கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: IIT Madras JAM 2024 தேர்வு: செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.