ETV Bharat / state

காவல் நிலையம் சூறையாடல் வழக்கில் கே.என் நேரு ஆதரவாளர்கள் ஜாமீன் தள்ளுபடி!

author img

By

Published : Mar 24, 2023, 8:15 AM IST

Etv Bharat
Etv Bharat

திருச்சி காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருச்சி: திருச்சி கண்டோன்மென்ட் எஸ்பிஐ காலனி பகுதியில் கடந்த 15 ஆம் தேதி, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் நவீன இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அருகே மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு உள்ளது. இந்த நிலையில், இந்த திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் கே.என்.நேருவிற்கு எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் எம்பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, திருச்சி சிவா எம்பியின் வீட்டில் உளளே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்து நொறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே என் நேருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய பத்துக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்து திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படிங்க: கார் கண்ணாடி உடைப்பு விவகாரம் - ''தனி நபரை விட கட்சி தான் முக்கியம் என நினைப்பவன் நான்'' - திருச்சி சிவா பேட்டி

அப்போது காவல் நிலையத்திற்குள் அத்துமீறி புகுந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் எம்.பி சிவாவின் ஆதரவாளர்களை தாக்கினர். இந்த தாக்குதலை தடுக்க வந்த பெண் காவலர் மீதும் காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, இந்த தாக்குதலை நடத்திய அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்களை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், முன்னாள் மாவட்ட பொருளாளர் மற்றும் அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ், 55 ஆவது முன்னாள் வட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் ராமதாஸ் மற்றும் முன்னாள் பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய ஐந்து பேருக்கு ஜாமீன் மனு கோரி, கடந்த மார்ச்.20 ஆம் தேதி, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் 2 வது முறையாக நேற்று (மார்ச்.23) ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி பாலாஜி, மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இந்த ஐந்து பேருக்கு ஜாமீன் பெற அவர்களது வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே, இது சம்பவம் தொடர்பாக நான்கு பேரை ஒழுங்கு நடவடிக்கையாக திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இதையும் படிங்க: மேற்கே ஒரு குழப்பம்... என்ன நடக்கிறது புதுக்கோட்டை பாஜகவில்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.