ETV Bharat / state

திருப்பூரில் சொகுசு கார் மோதி விபத்து; திமுக கவுன்சிலர், கைக்குழந்தை உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 2:00 PM IST

கார் மோதியதில் கணவன் மற்றும் 6 மாத குழந்தை பலி
கார் மோதியதில் கணவன் மற்றும் 6 மாத குழந்தை பலி

Tirupur road accident: திருப்பூரில் நடந்த சாலை விபத்தில் கோவை கவுன்சிலர் மற்றும் அவரது 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: கோயம்புத்தூர் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் செட்டிபாளையம் பேரூராட்சியின் பத்தாவது வார்டு திமுக கவுன்சிலராகவும் மற்றும் திமுக வட்டச் செயலாளராகவும் பதவியில் இருந்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில், நேற்று (நவ 12) இரவு சந்தோஷ், இந்துமதி மற்றும் குழந்தையுடன் கோயம்புத்தூரில் இருந்து ஈரோட்டுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது பெருமாநல்லூர் ஈட்டி வீரம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பி.எம்.டபிள்யூ கார் எதிர்பாராத விதமாக இவர்கள் காரின் மீது வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் கவுன்சிலர் சந்தோஷ் குமார் மற்றும் குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மனைவி இந்துமதி படுகாயங்களுடன் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பி.எம்.டபிள்யூ காரில் வந்த ஐந்து பேருக்கு காயம் அடைந்த நிலையில், அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மது போதையில் நண்பனை கொலை செய்து விட்டதாக இளைஞர் போலீசில் சரண்.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.