ETV Bharat / state

ஆட்டோ கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு

author img

By

Published : Aug 4, 2021, 6:14 PM IST

ஆட்டோ கவிழ்ந்து விபத்து
ஆட்டோ கவிழ்ந்து விபத்து

திருப்பத்தூரில் சாலையில் சென்ற ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மோகன் (31). இவர், ஜோலார்பேட்டை ரயிலில் வந்த வெளிமாநிலத்தவர் ஏழு பேரை தனது ஆட்டோவில் அழைத்துக்கொண்டு பர்கூரில் செயல்பட்டு வரும் சிப்காட் நிறுவனத்திற்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, மங்கம்மாகுளம் பகுதியில் திடீரென ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோ ஓட்டுநர் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அதிலிருந்த பயணிகள் ஏழு பேரும் படுகாயமடைந்தனர்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையிர், ஆட்டோ ஓட்டுநர் மோகனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய யாஷிகா... குழப்பத்தில் தயாரிப்பாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.