ETV Bharat / sitara

விபத்தில் சிக்கிய யாஷிகா... குழப்பத்தில் தயாரிப்பாளர்கள்

author img

By

Published : Aug 4, 2021, 12:05 PM IST

யாஷிகா
யாஷிகா

நடிகை யாஷிகாவிற்கு திடீரென ஏற்பட்ட விபத்தால் அவரை வைத்து படம் தயாரித்து வந்த தயாரிப்பாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

'பிக்பாஸ்' புகழ் யாஷிகா ஆனந்த், தனது தோழி வள்ளி ஷெட்டி பவானி (28) மற்றும் இரு ஆண் நண்பர்களுடன், ஜூலை 25ஆம் தேதி அதிகாலை புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியில், இவர்கள் வந்த கார் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரது தோழி வள்ளி ஷெட்டி உயிரிழக்க யாஷிகா உள்பட இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் யாஷிகாவிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால், அவர் குறைந்தது ஐந்து மாதங்களுக்கு படுக்கையிலிருந்து எழ முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர் கமிட்டாகி இருக்கும் படங்களின் நிலைமை என்னவாகும் என்ற சந்தேகம் எழுந்துள்ளன. இவர் நடிப்பில் ராஜபீமா, உத்தமன், பாம்பாட்டம் கடமையைச் செய் உள்ளிட்ட படங்கள் உருவாகி வந்தன. ஆனால் அதற்குள் அவருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதால் படத்தின் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று புரியாமல் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: பேட்ட மாளவிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.