துத்துக்குடி அடுத்து கோவில்பட்டி அருகே கிழவிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அங்கு பணியாற்றி வரும் தலைமை ஆசிரியை லீலா ஜெயலட்சுமி தினந்தோறும் பள்ளி வளாகத்தையும், கழிவறையையும் தினந்தோறும் சுத்தம் செய்ய கூறுவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பள்ளி வகுப்பறை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து வந்த தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு காவல்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வருகை புரிந்து கிராம மக்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், சுமூகமான முடிவு எட்டப்பட்டதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க:Banana Throwing Festival: வத்தலக்குண்டு அருகே 'வாழைப்பழ சூறைத் திருவிழா'