ETV Bharat / state

முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்பட்ட மனு திருப்பி அனுப்பப்பட்டதா? தூத்துக்குடியில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 12:53 PM IST

முதல்வரின் தனிப்பிரிவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கோரிக்கை மனு
முதல்வரின் தனிப்பிரிவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கோரிக்கை மனு

CM Cell: தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை மனு, திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

முதல்வரின் தனிப்பிரிவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கோரிக்கை மனுமுதல்வரின் தனிப்பிரிவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கோரிக்கை மனு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி உமயபார்வதி (65). இவருக்கு எழுத படிக்கத் தெரியாது. இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழிலாளர் நலத்துறை நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில், ஓய்வூதியம் வங்கியில் கடந்த மார்ச் மாதம் முதல் வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் பலமுறை கேட்ட போதும் உரிய பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவருக்கு எழுத படிக்க தெரியாததால் இவரது சகோதரர் மூக்காண்டி என்பவர் மூலம் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு, இது குறித்து தனது கோரிக்கை மனுவினை எழுதி, அஞ்சல் மூலம் அனுப்பி உள்ளார்.

ஆனால், தபாலானது முதலமைச்சர் தனிப்பிரிவுக்குச் சென்ற நிலையில், அந்த தபால் மறுக்கப்பட்டதாகக் (Refused) கூறி, தபால் அலுவலகப் பணியாளர்களால் மறுபடியும் உமயபார்வதி வீட்டிற்கேத் திரும்ப வந்துள்ளது. அஞ்சல் கவரில் தபால் மறுக்கப்பட்டதாக கூறும் வகையில் Refused என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உமயபார்வதி, தனக்கு கிடைத்து வந்த ஓய்வூதியம் வரவு வைக்கப்படாததால் மீண்டும் ஓய்வூதியம் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த இரண்டாவது கோரிக்கை மனு தற்போது மீண்டும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் கோரிக்கை மனு, தபால் அலுவலகத்தால் திரும்ப அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து இது அஞ்சல் அதிகாரிகள் தபாலை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பாமலேயே திருப்பி அனுப்பிவிட்டனரா? அல்லது தனிப்பிரிவு அதிகாரிகளின் அலட்சியமா? என தமிழக அரசு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: யார் இந்த குரூஸ் பர்ணாந்து? தூத்துக்குடி நகரத் தந்தைக்கு இன்று மணிமண்டபம் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.