ETV Bharat / state

தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கில் எஞ்சிய குற்றவாளிகள் விரைவில் கைது - டிஐஜி பிரவேஷ் அதிரடி

author img

By

Published : Mar 12, 2023, 6:18 PM IST

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் எஞ்சிய குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என டிஐஜி பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த காவலர்களை சந்தித்த டிஐஜி

தூத்துக்குடி: வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரை இன்று (மார்ச்.12) காலை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது ஜெயக்குமார், காவல் துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றார். இதில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி ஜெயக்குமார் காலில் காயம்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ராஜ பிரபு மற்றும் காவலர் சுடலை மணி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காவலர்களுக்கு ஆறுதல் கூற நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார். அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் உதவி ஆய்வாளர் ராஜ பிரபு, காவலர் சுடலை மணி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி விபரங்களை கேட்டறிந்தார். பின்பு, கொலை குற்றவாளி ஜெயபிரகாஷ் காலில் பட்ட குண்டு விபரங்களை அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணியிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஜெயபிரகாஷ் இருந்த இடத்தை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அங்கு தனிப்படை உதவியாளர் ராஜபிரபு, காவலர் சுடலைமணி ஆகியோர் ஜெயக்குமாரை பிடிக்க முயன்ற போது அரிவாளால் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோரை ஜெயக்குமார் வெட்டியுள்ளார். இதனையடுத்து உதவி ஆய்வாளர் கை துப்பாக்கியால் குற்றவாளியை காலில் சுட்டுள்ளார்.

இதில், தொடர்புடைய குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். அவர்களையும் விரைவில் பிடித்து விடுவோம்” என்று கூறினார்.

இந்த மருத்துவமனையில் ஆய்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜ், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: சாலையோரம் தூங்கியவர்கள் மீது கார் மோதி கோர விபத்து - 3 பேர் பலியான சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.