ETV Bharat / state

காரில் வைத்து ஒருவர் எரித்துக் கொலை - தூத்துக்குடி அருகே நடந்த பகீர் சம்பவம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 10:39 AM IST

A person was burnt to death in a car
காரில் வைத்து ஒருவர் எரித்துக் கொலை தூத்துக்குடி அருகே நடந்த பகீர் சம்பவம்

A person was burnt to death in a car: தூத்துக்குடி அருகே காட்டுப் பகுதியில் காரின் டிக்கியில் வைத்து ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரில் வைத்து ஒருவர் எரித்துக் கொலை தூத்துக்குடி அருகே நடந்த பகீர் சம்பவம்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே சூரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞானபுரம் காட்டுப் பகுதியில் TN 64 F 1584 என்ற பதிவு எண் கொண்ட மாருதி ஷிப்ட் கார் ஒன்று நள்ளிரவு நேரத்தில் எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அவ்வழியாக சென்ற உப்பள தொழிலாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க சென்ற போது அங்கு காரின் டிக்கியில் சடலம் ஒன்று எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். முற்றிலும் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் அப்பகுதியில் வைத்தே பரிசோதனைகள் நடத்தினர். இந்த பரிசோதனையில் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்த சடலமானது ஒரு ஆணின் சடலம் என்பதை கண்டறியப்படது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனும் சம்பவ இடத்திற்கு நேரில் வருகைதந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். காரின் பதிவெண்ணை கொண்டு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த சின்னசாமியின் மகன் நாகஜோதி (48) என்பவருக்கு சொந்தமான கார் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், காரின் டிக்கியில் வைத்து எரிக்கப்பட்ட ஆண் சடலம் யாருடையது? என்ற கோனத்திலும் அல்லது காரின் உரிமையாளரான நாகஜோதி கடத்தி வரப்பட்டு கார் டிக்கியில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இந்த கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்த எந்தவொரு முழுமையான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பாக சூரங்குடி காவல் நிலைய போலீசார் நாகஜோதியின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுப் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் காரில் ஒருவர் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், விளாத்திகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதயும் படிங்க: தபால் நிலையத்தில் சிறு சேமிப்பு பணம் கையாடலா?.. பொது மக்கள் முற்றுகை.. ஊழியர்களுடன் வாக்குவாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.