ETV Bharat / state

ஆரணியில் கஞ்சா கடத்திய மூவர் கைது

author img

By

Published : Jun 20, 2021, 2:22 PM IST

ganja
ஆரணி

ஆரணியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை மாதவரம் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர்: சென்னையில் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுத்திடப் பெருநகர காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூரில் ஆரணியிலிருந்து மாதவரம் பகுதிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மாதவரம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், ரகசியமாக அப்பகுதியைக் கண்காணித்து வந்தனர்.

ganja smuggling
ஆறு கிலோ கஞ்சா பறிமுதல்

அப்போது, மகேந்திரன் என்பவரிடம் ராஜா, தினேஷ் குமார் ஆகியோர் கஞ்சா வாங்கும்போது, அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 'வீட்டிலிருந்தே வருமானம்' - விளம்பரத்தை நம்பி வில்லங்கத்தில் சிக்கிய நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.