ETV Bharat / state

GIS தொழில்நுட்ப உதவி மூலம் சட்டப்பேரவை தேர்தல் - நெல்லை ஆட்சியருக்கு விருது

author img

By

Published : Jan 24, 2022, 7:41 AM IST

தொழில்நுட்ப உதவி மூலம் சட்டப்பேரவை தேர்தலை சிறப்பாக நடத்திய நெல்லை ஆட்சியருக்கு விருது
தொழில்நுட்ப உதவி மூலம் சட்டப்பேரவை தேர்தலை சிறப்பாக நடத்திய நெல்லை ஆட்சியருக்கு விருது

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், GIS தொழில்நுட்ப உதவியுடன் தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு இந்திய தேர்தல் ஆணையம் விருது அறிவித்துள்ளது.

திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று, மே 2ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. வாக்குப் பதிவு மையத்தை தயார் செய்வது, வாக்கு எண்ணிக்கை, பயணங்கள், அலுவலக செலவுகள், அலுவலர்களுக்கான ஊதியம் என சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக 744 கோடி ரூபாய் செலவானதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், தேர்தலுக்கு 617 கோடியே 75 லட்சம் ரூபாயும் கோடியும், தொலைபேசி, எரிபொருள், வாடகை வாகனம், விளம்பரம் உள்ளிட்ட செலவினமாக 126 கோடியே 18 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுக்கு விருது

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், GIS தொழில்நுட்பத்தின் உதவியுடன், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலுள்ள 1,924 வாக்குச் சாவடிகளும் முறையாக கண்காணிக்கப்பட்டது.

இதில், வாக்காளர்கள் முதல் தேர்தலில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில், ”வாக்குச்சாவடி வழிகாட்டி” என்ற இணையதள அமைப்பைத் திருநெல்வேலி மாவட்ட தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கியது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் தங்கள் இருப்பிடத்திலிருந்து தங்களுக்குரிய வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல வேண்டிய வழிகளைத் தெளிவாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் 360 கோண பரிணாமத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளின் உட்புறத் தோற்றத்தையும் இந்த இணையதளம் வழியாகவே எளிதாகப் பார்த்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

மேலும் வாக்குச் சாவடியின் உட்புற மாதிரி தோற்றத்தினையும் பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய அமைப்பு வாக்காளர்களுக்கு மட்டுமின்றி தேர்தல் பார்வையாளர்களுக்கும், நுண்-பார்வையாளர்களுக்கும், வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கும் இந்த ”வாக்குச் சாவடி வழிகாட்டி” மிகவும் உபயோகமாக இருந்தது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

சமூக ஊடகங்களில் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்தை கண்காணிக்கும் விதமாக “தேர்தல் - சமூக ஊடகங்களை கண்காணிக்கும் அமைப்பு” என்ற புதிய இணையதள அமைப்பின் மூலம் சென்ற வருடச் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் சமூக ஊடக கணக்குகளும் கண்காணிக்கப்பட்டன.

அவதூறு பேச்சு, பொய்ப் பிரச்சாரம், தேர்தல் செலவுகள் மற்றும் தேர்தல் நன்னடத்தை விதி மீறல் போன்ற தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து விதி முறைகளும் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டன.

தேர்தல்
தேர்தல்

இந்த நிலையில் தேர்தலில் கணினி தொழில்நுட்பத்திலுள்ள புதிய கண்டுபிடிப்புகளை தேர்தலுக்காக முன்மாதிரியாகக் கையாண்டதை பாராட்டும் விதமாகத திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான விஷ்ணுவுக்கு தேசிய வாக்காளர் தினமான, 25-01-2022 அன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்கி பாராட்ட உள்ளது.

இதையும் படிங்க: சொற்ப வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த வேட்பாளர்கள் பட்டியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.