ETV Bharat / state

ரஜினிகாந்த் போல அனைத்து நடிகர்களும் தேசபக்தி கொண்டிருக்க வேண்டும் எனக்கூறிய மத்திய அமைச்சர்

author img

By

Published : Aug 12, 2022, 9:21 PM IST

ரஜினிகாந்த் போல அனைத்து நடிகர்களுக்கு தேசபக்தி கொண்டிருக்க வேண்டும் மத்திய அமைச்சர் எல்.முருகன்
ரஜினிகாந்த் போல அனைத்து நடிகர்களுக்கு தேசபக்தி கொண்டிருக்க வேண்டும் மத்திய அமைச்சர் எல்.முருகன்

ரஜினிகாந்த் போல அனைத்து நடிகர்களுக்கும் தேசபக்தி கொண்டிருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்

நெல்லை ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்ய மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆகியோர் வருகை தர உள்ளனர். அதனைத் தொடர்ந்து சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மத்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசுத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக வருகை தந்த மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “இன்று பாரத தேசம் முழுவதும் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாரதப்பிரதமர் மோடி நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசபக்தி உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுவார்கள்.

சுதந்திரப்போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் அதன் ஒரு பகுதியாக ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிட்ட ஒண்டி வீரனின் நினைவாக அவரது தபால் தலை வரும் 20ஆம் தேதி நெல்லையில் வெளியிடப்படுகிறது. நூறாவது சுதந்திர தினத்தைக்கொண்டாடும் நேரத்தில் இந்தியா உலகத்திற்கே வழிகாட்டும் தேசமாக இருக்கும்.

அதற்காக நாட்டுமக்கள் அனைவரும் உழைக்க வேண்டும். மத்திய அரசு மிகத்தீவிரமாக அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசபக்தி நிறைந்த நடிகர் ரஜினிகாந்தைப் போல மற்ற நடிகர்களும் முகநூல் முகப்பில் தேசியக் கொடியை வைக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனையே தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போதைப்பொருள் விற்பனையினை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட எதையும் நிறைவேற்றவில்லை. மகளிருக்கு ரூபாய் ஆயிரம் என திமுக அறிவித்தது என்னாச்சு..? என்பது கேள்விக்குறியாக உள்ளது கூட்டணியில் மற்ற கட்சிகளை சேர்ப்பது குறித்து தேர்தல் நேரத்தில் அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும்.

ரஜினிகாந்த் போல அனைத்து நடிகர்களும் தேசபக்தி கொண்டிருக்க வேண்டும் எனக்கூறிய மத்திய அமைச்சர்

மேலும் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரப்போராட்ட வீரர்களை நினைவு கூரும் வகையில் தூர்தர்ஷனில் 75 பகுதிகளாக வரும் 15ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படுகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஆன்லைன் மூலம் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.