ETV Bharat / state

குழந்தை மரணம் - டாக்டர் பொய் சொன்னதாக அரசு மருத்துவமனை முற்றுகை!

author img

By

Published : Oct 1, 2019, 11:31 PM IST

thanjai

தஞ்சை: திருவையாறு அருகே உயிருடன் இருந்த குழந்தையை இறந்து விட்டதாகக் கூறி திருப்பி அனுப்பிய அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், இவரது மனைவி ப்ரீத்தி. இவர்கள் இருவருக்கும் கெவின் என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது.

இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு, குழந்தையின் உடல் நிலை சரியில்லாததால், ப்ரீத்தி குழந்தையை தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைக்கு இறுதி சடங்கு செய்யும் வேளையில் குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது.

உடனே உறவினர்கள் குழந்தை இன்னும் இறக்கவில்லை என முடிவு செய்து, மீண்டும் 10 மணியளவில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பணியிலிருந்த மருத்துவர், குழந்தை அரைமணி நேரத்திற்கு முன்னரே இறந்ததாக தெரிவித்தார்.

இதைக்கேட்ட குழந்தையின் பெற்றோர் காலை உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாகக் கூறி சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியதால்தான் தற்போது குழந்தை உயிரிழந்தது எனக் குற்றஞ்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் மருத்துவர்களிடம் விசாரிக்கையில் குழந்தை காலை வரும்பொழுதே இறந்துவிட்டதாகவும், உடலில் ஏற்பட்ட அசைவு காரணமாக அவர்கள் குழந்தை உயிருடன் இருப்பதாக நினைத்து அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவர் குழந்தை தற்போது இறந்தது என கூறவில்லை, அரைமணி நேரம் முன்னபாகவே இறந்தது என்றுதான் கூறினார். இதனை பெற்றோர் தவறாக புரிந்துகொண்டு போராட்டம் நடத்துகின்றனர் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

கோரக்பூர் குழந்தைகள் பலியான விவகாரம்; கோரிக்கை விடுத்த கபீல் கான்!

Intro:தஞ்சாவூர் ஆக 01



உயிருடன் இருக்கும் குழந்தையை இறந்ததாக கூறி வீட்டுக்கு அனுப்பியதாக அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு. தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை முற்றுகையிட்ட உறவினர்கள்Body:.


தஞ்சை அடுத்த திருவையாறு அருகே நடுக்காவேரி ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர், ப்ரீத்தி இவர்களது ஒன்றரை வயது மகன் கெவின் குழந்தைக்கு சளி காரணமாக உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து இன்று காலை 5 மணிக்கு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். குழந்தையை பரிசோதித்தல் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறி அனுப்பிவிட்டனர். இன்நிலையில் குழந்தையை எடுத்துச் சென்று இறுதி சடங்கிற்கு தயார் செய்து கொண்டிருக்கும் போது குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது. அதீர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு மீண்டும் காலை 10 மணிக்கு குழந்தையை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது பணியில் இருந்த மருத்துவர் குழந்தை அரை மணி நேரத்திற்கு முன்பே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட பெற்றோர் காலை உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியது தான் குழந்தை உயிரிழந்ததற்கு காரணம் என குற்றம் சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் மருத்துவமனை மீது தொடர்ந்து குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் குழந்தைக்கு நேர்ந்த இந்த நிகழ்வுக்கு பிறகு குழந்தைக்கு ஏற்பட கூடாது என குற்றம் சாட்டி மருத்துவர்களிடமும் காவல்துறையினரும் விவதத்தில் ஈடுபட்டனர் இதனால் மருத்துவமனையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பணியில் உள்ள நிலைய மருத்துவரிடம் கேட்டபோது குழந்தை காலை வரும்பொழுதே இறந்துவிட்டதாகவும் உடலில் ஏற்பட்ட அசைவு காரணமாக அவர்கள் உயிருடன் இருப்பதாக நினைத்து அழைத்து வந்துள்ளனர். ஆனால் பணியில் இருக்கக்கூடிய மருத்துவர் குழந்தை தற்போது இறந்தது என கூறவில்லை அரை மணி நேரத்திற்கு முன்பாகவே இழந்துவிட்டது என்றுதான் கூறினார் அவர் கூறியதை தவறாக புரிந்து கொண்ட பெற்றோர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும். குழந்தை இறந்தது வருத்தம் அளித்தாலும் பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டு இதுபோல் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.