ETV Bharat / state

நாமக்கல் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தென்காசி அருகே தலைகீழாக கவிழ்ந்து விபத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 7:06 PM IST

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து

Tenkasi Van Accident: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

தென்காசி: கடையநல்லூர் அருகே சிங்கிலிபட்டி - சொக்கம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தலைகீழாக கவிழ்ந்தது.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற சொக்கம்பட்டி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேரை சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான வேனில் பயணித்தவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஊனாங்கால்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

சபரிமலை கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு வழியில் குற்றாலத்தில் குளித்துவிட்டு புறப்படும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: தென்காசியில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.