ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி தற்கொலை

author img

By

Published : Jun 12, 2022, 6:40 PM IST

திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி தற்கொலை
சின்னசேலத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி தற்கொலை

சின்னசேலத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்த திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகேவுள்ள கொசப்பாடி கிராமத்தைச்சேர்ந்தவர், ஓட்டுநர் ரமேஷ். இவருக்கும் அதே கிராமத்தைச்சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணுக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது. இதனால், இருவரும் தங்களது கணவர், மனைவியைப் பிரிந்து கடந்த 10 நாள்களுக்கு முன்னர் சின்னசேலம் பழைய பேருந்து நிலையம் பின்புறம் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் கொசப்பாடியில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளனர். இதனையடுத்து ரமேஷ் மற்றும் ரஞ்சிதா உறவினர்கள் சங்கராபுரம் காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சங்கராபுரம் காவல் துறையினர் மூலமாக சின்னசேலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னசேலம் காவல் துறையினர், வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். கதவு திறக்காத நிலையில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

அப்போது, ரஞ்சிதா தூக்கில் தொங்கிய நிலையிலும் ரமேஷ் மதுவில் விஷம் கலந்து குடித்த நிலையிலும் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரின் உடலையும் மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் தங்களது கணவர், மனைவியைப் பிரிந்து வசித்த வந்த நிலையில் இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதாக என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் கட்சி தலைவரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.