ராமநாதபுரத்தில் செயல்பட்டுவரும் ’இன்னர் வீல் கிளப் ஆப் ராமநாடு’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண்கள், மாவட்டத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் ‘ஆதரவற்றவர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்ற மாதம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், போட்டிகள் இந்த கிளப் சார்பில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து தனுஷ்கோடி வரையில் உள்ள பகுதிகளுக்கு கார் மூலம் சென்று ’முதியோரைக் காப்போம்’ என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்த பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.