ETV Bharat / state

அன்னவாசல் அருகே காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

author img

By

Published : Oct 18, 2019, 9:15 AM IST

இளைஞர்

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே காணாமல் போன இளைஞர் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் ராஜூ (29). டிரைவரான இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடிபழக்கத்திற்கு அடிமையான ராஜூ நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் இரவு நேரம் ஆகியும் ராஜூ வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது மனைவி சத்யா, உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளார், ஆனால் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து அவர் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பரம்பூர் பகுதியில் உள்ள பள்ளக்குளத்தில் காணாமல்போன ராஜூ சடலமாகக் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ராஜூவின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராஜூ தற்கொலை செய்து கொண்டரா அல்லது யாரேனும் கொலை செய்தனரா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பயணிகள் ரயிலில் 3 வயது பெண் குழந்தையின் சடலம் மீட்பு

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் முத்தம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் ராஜூ (வயது-29) டிரைவரான இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ராஜூவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம் இதனால் அவரது மனைவி அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார் ஆனால் அவர் கிடைக்கவில்லை

பின்ன இன்று ராஜூவின் உடல் பரம்பூர் பள்ளத்திகுளத்தில் மிதப்பதாக தகவல் பரவியது பின்னர் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அன்னவாசல் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராஜூவின் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து இறந்தவரின் மனைவி சத்யா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்குபதிவு செய்து ராஜூ எப்படி இறந்தார் என
பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.